Monday, May 18, 2009

புலிகளின் பலரது உடலங்கள் மீட்பு.


இடம் பெற்று முடிந்திருக்கின்ற யுத்தத்தில் புலிகளின் முக்கிய தளபதிகள்
பலரது உடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பமைச்சக செய்திகள் தெரிவிக்கின்றன.

அதில் குறிப்பாக புலிகளின் தலைவர் பிரபாகரனது புதல்வர் சார்ல்ஸ் அன்ரனியின் என நம்பப்படும் உடல் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

மேலும், மட்டு - அம்பாறைத் இராணுவத் தளபதி ரமேஸ், புலனாய்வுத்துறைப் பிரதித்தலைவரும் பிரபாகரனது பாதுகாப்புப் பொறுப்பாளராக செயற்பட்டு வந்தவருமான கபிலம்மான், அரசியல்துறைப் பொறுப்பாளர் நடேசன், காவற்துறைப் பொறுப்பாளர் இளங்கோ, சமாதான செயலக இயக்குனர் புலித்தேவன் மற்றும் தளபதி சுடர்மன் ஆகியோரது உடலங்கள் இனம் காணப்பட்டுள்ளதாக பாதுகாப்பமைச்சகம் தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment