Monday, May 11, 2009

ஒசாமா பின்லேடன் உயிருடன் இல்லை: அதிபர் சர்தாரி சொல்கிறார்

அல்கொய்தா இயக்கத் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையையொட்டிய மலைப்பகுதியில் பதுங்கியிருக்கலாம் என்று அமெரிக்க ராணுவ அதிகாரிகள் கருதுகிறார்கள். இந்த நிலையில், அமெரிக்காவின் என்.பி.சி. டெலிவிஷனுக்கு பேட்டியளித்த பாகிஸ்தான் அதிபர் சர்தாரியிடம், ஒசாமா பின்லேடன் எங்கே இருக்கிறார் என்று கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து சர்தாரி கூறியதாவது:-

ஒசாமா உயிருடன் இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஒசாமா பற்றி நான் எங்களது புலனாய்வுத்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் ஒசாமாவை பற்றி கடந்த 7 வருடங்களாக கேள்விப்படவே இல்லை என்று தெரிவித்தனர். எனவே ஒசாமா உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்று நான் மிகவும் உறுதியாக நம்புகிறேன். மேற்கண்டவாறு சர்தாரி கூறினார்.
நன்றி தினத்தந்தி

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com