Monday, May 11, 2009

புலிகளின் மேலும் இரு வண்டவாளம்.


புதிதாக படையினரால் கைப்பற்றப்பட்ட கரையாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் தேடுதல் மேற்கொண்ட படையினர் புலிகளது இரு டபிள்கப் வாகனங்களைக் கண்டு பிடித்துள்ளனர். இருவாகனங்களிலும் 27 மிமி கலிபர்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வாகனங்கள் இரண்டும் கடந்த சில வாரங்களாக முன்னேறிய படையினருக்கு எதிராக புலிகள் மேற்கொண்ட தாக்குதல்களின் பிரதான பங்கு வகித்துவந்ததாகவும் இறுதியில் அவை புலிகளால் கைவிடப்பட்டுச் சென்றுள்ளதாகவும் படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இவ்வாகனத்தில் மேலதிகமாக ஜிபிஎம்ஜி ரக ஆயுதங்களும் பொருத்தப்பட்டிருந்ததுடன் அப்பிரதேசத்தில் படையினர் மேற்கொண்ட தேடுதலில் 3 தற்கொலை அங்கிகள் உட்பட பல ஆயுதங்களை மீட்டுள்ளனர்.



No comments:

Post a Comment