Wednesday, May 13, 2009

புலிகளின் பல்குழல் மோட்டார் மீட்பு.

கரையாமுள்ளிவாய்கால் பகுதியில் செயற்படுகின்ற 9வது கெமுனு வோர்ச் அணியைச் சேர்ந்த படையினர் இன்று காலை புலிகளின் 6 குழல் கொண்ட பல்குழல் மோட்டார் ஒன்றைக் கண்டுபிடித்துள்ளனர். வன்னி மீட்பின் போது பல வகையான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டிருந்தபோதிலும் பல்குழல் மோட்டார் ஒன்று கைப்பற்றப்பட்டிருப்பது இதுவே முதற்தடவையாகும்.

இதே இரகத்தை ஒத்த பல்குழல் மோட்டார் ஒன்று கிழக்கு மீட்கப்பட்டபோது தொப்பிக்கல காட்டுப்பிரதேசங்களில் கைப்பற்றப்பட்டிருந்தது. சிறிலங்கா அரசு பல்குழல் மோட்டார்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கு முன்னர் புலிகளே அவற்றை யுத்தத்தில் பாவனையில் அமர்த்தினார்கள் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

No comments:

Post a Comment