Thursday, May 7, 2009

தனி ஈழமா? சவால் விடுகின்றார் ராமதாஸ்.

தனி ஈழம் விவகாரத்தில் முதல்வர் கருணாநிதிக்கு பா.ம.க நிறுவனர் ராமதாஸ சவால் விடுத்துள்ளார். தர்மபுரியில் நிருபர்களை கண்டு பேசிய ராமதாஸ்: கருணாநிதி ஈழம் அமைக்கப்படும் எனக் கூறியுள்ளார். 40 ஆண்டுகளாக இல்லாத அக்கறை அவருக்கு இப்போது எங்கிருந்து வந்துள்ளது. அதை அவர் எவ்வாறு அடையப் போகின்றார்.? என்பதை தெளிவாக விளக்க வேண்டும்.

இலங்கைக்கு இராணுவத்தை அனுப்பி ஈழம் அமைப்பாரா? அதற்கு மத்திய அரசு ஒத்துழைக்குமா என்கின்ற விடயங்களை அவர் மக்களுக்கு தெளிவு படுத்தவேண்டும். இது நான் அவருக்கு விடுக்கும் சவால் வாய்க்கு வந்தவற்றை பேசும் போது அவற்றுக்கான விளக்கத்தை மக்களுக்கு தெளிவாக கூறவேண்டும் என்றார் அவர்.

No comments:

Post a Comment