Wednesday, May 6, 2009

யுத்தம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில் தற்கொலைத் தாக்குதல்கள் அதிகரிக்கின்றது.


வன்னியில் சகல பிரதேசங்களையும் இழந்து 5 சதுர கிலோமீற்றர் பரப்பளவினுள்ள முடங்கியுள்ள புலிகள் இராணுவத்தினரின் இறுதி யுத்த தந்திரோபாயங்களைக் முறியடிப்பதற்காக தற்கொலைத் தாக்குதல்களை அதிகரித்துள்ளதாக தெரியவருகின்றது. கடந்த ஒருவாரத்தில் புலிகள் 8 தற்கொலைத் தாக்குதல்களை புலிகள் மேற்கொண்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் உதயநாணயக்கார இலங்கைநெற் இற்கு தெரிவித்தார்.

கடந்த வாரம் படையினரால் கைப்பற்றப்பட்ட புலிகளின் இறுதி பாதுகாப்பு அணைப் பிரதேசங்களிலேயே இத்தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளது. இதில் 30-40 படையினர் காயமடைந்துள்ளனர். இத்தாக்குதல்கள் பெரிய தாக்கங்களை ஏற்படுத்தப்போவதில்லை. அவற்றைக் கட்டுப்படுத்த அங்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment