Thursday, April 30, 2009

ரோறொன்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மீது தாக்குதல் மேற்கொண்டவர்கள் தொடர்பான வீடியோ பதிவு ஆர்சிஎம்பி கையில்



புலி ஆதரவாளர்கள் ரொறொன்ரோவில் உள்ள இலங்கைத் தூதரகத்தை தாக்கு முகமாக கடந்த 27.04.2009 அன்று தூவராயலத்திற்கு சென்றிருந்தனர். அங்கு சென்றவர்கள் இலங்கைத் தூதரான பந்துள ஜெயசேகராவுடன் சந்திப்பு ஒன்று உள்ளதாக கூறியுள்ளனர். தூதருடைய நிகழ்ச்சி நிரலைப் பார்வையிட்ட ஊழியர்கள் அவ்வாறானதோர் சந்திப்பு பதிவாகியிராததையிட்டு அவர்களுக்கு அனுமதி மறுத்தனர்.

பலாத்தாரமாக தூதரக வளாகத்தினுள் புக முற்பட்ட அவர்களை தூதரக காவல் அதிகாரிகள் தடுத்த போது அங்கிருந்த சிறீலங்கா எயர்லைன் ஆளளவு உயரமுள்ள சேவைதாதிக் கட்டவுட்டின் தலையைக் கொய்து கொண்டு போய் தமது நெட்டூர எல்லை எந்த மட்டத்திற்குப் போகும் என்று உலகத்திற்குக் காட்டியுள்ளார்கள்.

இதைத்தொடர்ந்து அங்கு விரைந்த பொலிஸாருக்கு பாதுகாப்பு கமராவில் பதிவாகியிருந்த படங்கள் காட்சிகள் அனைத்தும் கொடுக்ப்பட்டுள்ளதுடன் பொலிஸார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளதாக தெரியவருகின்றது.

No comments:

Post a Comment