புலிகளின் தளபதிகள் மேலும் 6 பேரது உடலங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.
இடம்பெற்று முடிந்துள்ள இறுதி யுத்தத்தில் கொல்லப்பட்ட புலிகளின் சடலங்கள் அடையாளம் காணப்பட்டு வருவதாக பாதுகாப்பு அமைச்சகம் அறிவித்துள்ளது. புலனாய்வுத்துறையைச் சேர்ந்தவர்களான லெப் கேணல் வேட்டி, லெப் கேணல் ராம் குமார், லெப் கேணல் கோமாலி எனப்படும் மணிமேகலா, லெப் கேணல் வினோதன் ஆகியோரும் மட்டக்களப்பு மாவட்ட அரசியல் துறைப்பொறுப்பாளர் அண்ணாத்துரை, கடற்புலிகளின் தளபதிகளில் ஒருவரான கேணல் றங்கன் ஆகியோரது உடலங்கள் காணப்பட்டுள்ளதாகவும் அச்செய்திகள் தெரிவிக்கின்றன.
0 comments :
Post a Comment