Sunday, May 10, 2009

700 பொதுமக்கள் மீட்க்கப்பட்டுள்ளனர். படையினர் 250 மீற்றர் தொலைவில்

முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினர் இன்றுகாலை யுத்த சூனியப்பிரசேத்தில் இருந்த 700 மக்களை மீட்டுள்ளனர். மக்கள் வெளியேறுகையில் புலிகளால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப்பிரயோகத்தில் காயமடைந்த நான்கு பொதுமக்கள் விசேட ஹெலிக்கொப்படர்கள் முலம் அனுராதபுர வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இன்று மக்கள் வெளியேறுகையில் அவர்களைத் தடுக்கும் பொருட்டு புலிகள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டமை படையினரது ராடர் கருவிகளில் பதிவாகியுள்ளதாகவும் படையினர் மக்கள் மீது தாக்குதல் நாடாத்துவதாக புலிகள் மேற்கொண்டு வரும் பிரச்சாரங்களில் எவ்வித உண்மையும் இல்லை எனவும் அச்செய்தியில் குறிப்படப்பட்டுள்ளது.

மேலும் படையினரால் புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள யுத்த சூனியப்பிரதேசத்தில் இருந்து படையினர் 250 மீற்றர் தொலைவில் உள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com