மாவிலாற்றில் தொடங்கி வன்னியில் முடிவடைந்திருக்கின்ற யுத்தத்தில் 6261 படையினர் தமது உயிர்களை இந்த நாட்டிற்காக தியாகம் செய்துள்ளனர் என பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன் 29551 பேர் காயமடைந்ததுடன் அவர்களில் 2556 பேர்
அங்கவீனர்களாக்கப்பட்டுள்ளனர் என நேற்று தொலைக்காட்சி ஒன்றில் இடம்பெற்ற நேரடி ஒலிபரப்பில் கலந்து கொண்டு பேசிய அவர் கூறினார்.
No comments:
Post a Comment