Friday, May 1, 2009

58 புலிச் சிறார்கள் புனர்வாழ்வு நிலையங்களுக்கு அனுப்பப்படுகின்றனர். நீதிமன்ற உத்தரவு.



கடந்த ஒரிருதினங்களில் படையினரிடம் சரணடைந்திருந்த 58 சிறார்ப் புலிகளை படையினர் பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர். அச்சிறார்ப் புலிகள் தொடர்பான விசாரணைகளை மேற்கொண்ட பொலிசார் அவர்களை வவுனியா நீதிமன்றில் ஆஜர் செய்தனர். மேற்படி சிறார்களை அம்பேபுஸ்ஸ புனர்வாழ்வு நிலையத்திற்கு அனுப்பி வைக்குமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அச்சிறார்கள் அனைவரும் 14 - 18 வயதிற்குட்பட்டவர்கள். அவர்களில் 38 ஆண்களும் 20 பெண்களும் அடங்குகின்றனர். அவர்கள் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட முன்னர் வவுனியா வைத்திய அதிகாரியிடம் காண்பிக்கப்பட்டு வைத்திய அதிகாரியின் அறிக்கையும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment