Saturday, May 9, 2009

புலிகளின் 31 உடல்கள் மற்றும் பெருந்தொகையான ஆயுதங்கள் வெடிபொருட்கள் மீட்பு.

முல்லைத்தீவு : கரையாமுள்ளி வாய்கால் , வெள்ளாமுள்ளி வாய்கால் உடையார்கட்டுக்குளம் , வவுனவில்லுப் பிரதேசங்களில் படையினர் தொடர்ந்தும் தமது நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். யுத்த சூனியப் பிரதேசங்களில் மக்களோடு மக்களாக நிற்கும் புலிகள் படையினர் மீது சிவில் உடையில் நின்று தாக்குதல் நாடாத்துவதாக தெரியவருகின்றது.

அப்பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல்களின் போது படையினர் புலிகளின் 31 உடல்களையும் பெருந்தொகையான ஆயதங்கள் , வெடிமருந்துகள் என்பவற்றை கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment