Thursday, May 14, 2009

புலிகள் பலத்த இழப்புக்களைச் சந்திக்கின்றனர். பிரதேச தலைவர் ஒருவர் பலி. 18 உடலங்கள் மீட்பு.

கரையாமுள்ளிவாய்கால் பிரதேத்தில் நேற்று 58ம் படையணியினருக்கும் புலிகளுக்கும் இடம்பெற்ற மோதலில் புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. ஓரு மைதானம் அளவு பிரதேசத்தினுள் முடக்கப்பட்டுள்ள புலிகள் கடந்த சில நாட்களாக தமது உச்ச வலுவை படையினர் மீது பிரயோகித்து வருகின்றனர். இத்தாக்குதல்களில் கன்னிக்கரன் என்படும் புலிகளின் பிரதேசத் தலைவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் 18 உடலங்கள் மீட்க்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன் விசுவமடு வட-கிழக்கு மற்றும் தென்-மேற்குப் பிரதேசங்களில் படையினர் பெருந்தொகையான ஆயுதங்களை மீட்டுள்ளதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com