Saturday, April 11, 2009

கருணாவின் மைத்துனர் படையினரிடம் சரண்.

புலிகளின் முன்னைநாள் மட்டு-அம்பாறை தளபதியும் இன்றைய பொ.ஐ.முன்னணி அரசின் அமைச்சருமான கருணா எனப்படும் முரளிதரனது மைத்துனர் வவுனியா ஓமந்தை சோதனைச்சாவடியில் சரணடைந்துள்ளார். படைத்தரப்பு தகவல்களின் படி சரணடைந்துள்ள இளைஞர் தான் முரளிதரனின் மைத்துனர் என தன்னை அறிமுகப்படுத்தியுள்ளார்.

அவர் தான் கிழக்கு மாகணத்தில் தனது மைத்துனர் கருணா தலைமையில் இராணுவத்தினருக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட பல தாக்குதல்களில் பங்கெடுத்துள்ளதாகவும் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் வெளிநாடொன்றிற்கு சென்று அங்கு ஒரு வருடம் தங்கியிருந்த பின்னர் வன்னி திரும்பியதாகவும் தெரிவித்துள்ளதுடன் புதுமாத்தளன் பகுதியில் பாதுகாப்பரண் ஒன்றில் தான் கடமையில் இருந்தபோது ஆயுதங்களை தூக்கி எறிந்து விட்டு உயிர் தப்பி வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment