Thursday, April 16, 2009

ஜனாதிபதி மஹிந்த கிளிநொச்சி விஜயம்.



இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜாபக்ச முதன் முறையாக கிளிநொச்சி விஜயம் செய்துள்ளார். கிளிநொச்சி முல்லைத்தீவுப் பகுதிகளில் நிலைகொண்டுள்ள படையினரையும் இடம்பெயர்ந்துள்ள மக்களையும் நேரடியாக சந்தித்து அவர்களுக்கு சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவிக்கும் பொருட்டு இவ் விஜயம் அமைந்ததாக செய்திகள் தெரிவிக்கின்றன.
புலிகளின் தமிழீழ ராஜ்யத்தின் தலைநகரான கிளிநொச்சி கடந்த தை மாதம் 2ம் திகதி படையினர் வசம் வீழ்ந்ததைத் தொடர்ந்து 30 ஆண்டு காலங்களுக்கு பின்னர் நாட்டின் தலைவர் ஒருவர் இப்பிரதேசங்களுக்குச் சென்றிருப்பது இதுவே முதற்தடவையாகும். ஜனாதிபதியுடன் பாதுகாப்பமைச்சின் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர் ஆகியோரும் சென்றிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com