Thursday, April 16, 2009

புலிகளின் கேணல் வீரத்தேவன் பலி.



கடந்த 05-04-2009 திகதியை அண்டிய தினங்களில் புதுக்குடியிருப்பின் கிழக்கே இடம்பெற்ற பாரிய மோதலில் கேணல் வீரத்தேவன் என அழைக்கப்படும் திருமலை மாவட்டத்தை சேர்ந்த மாணிக்க வாசகன் சுதந்தன் என்பவர் பலியாகியுள்ளதாக புலிகள் அறிவித்துள்ளனர்.

இம்மோதலின் போது தீபன் விதுஷா நாகேஸ் உட்பட புலிகளின் முன்னணித்தளபதிகள் பலர் கொல்லப்பட்டுள்ளதாக படையினர் அறிவித்திருந்தனர். ஆனால் மேற்படி இழப்பு தொடர்பாக எவ்வித செய்திகளையும் வெளியிட்டிராத புலிகள் தற்போது படிப்படியா அம்மோதலில் உயிரிழந்த முக்கியஸ்தர்களின் பெயர்களை வெளிவிட்டு வருகின்றனர்.

புலிகளின் செய்திகளின் படி அம்பாறை மட்டக்களப்பு திருமலை மாவட்டங்களைச் சேர்ந்த புலிகளின் சிரேஸ்ட உறுப்பினர்கள் பலரும் இறந்துள்ளதாக தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com