Wednesday, April 8, 2009

மதவாச்சியில் இருந்து வவுனியா வரை நீடிக்கப்படும் ரெயில் சேவை.



பாதுகாப்பு காரணங்களுக்காக மதவாச்சி வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த வவுனியா ரயில் சேவை இன்று முதல் மீண்டும் வனியாவரை விஸ்தரிக்கப்பட்டுள்ளது என ரயில் சேவைகள் திணைக்களம் அறிவித்துள்ளது. இன்று காலை முதன்முறையாக 5.45 மணிக்கு கொழும்பு புறக்கோட்டை ரயில் நிலையத்தில் இருந்து புறப்பட்ட ரயில் முற்பகல் 10 மணிக்கு வவுனியா ரயில் நிலையத்தை சென்றடைந்துள்ளது.

எதிர்வரும் தமிழ்-சிங்கள சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ள இச்சேவை தினமும் காலை 5.45 மணிக்கு இடம்பெறும் என தெரியவருகின்றது.





0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com