Friday, April 17, 2009

ஒக்கம்பிட்டிய கிராமவாசிகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் இராணுவத்தில் இருந்து ஓடிய ஒருவராலேலே மேற்கொள்ளப்பட்டுள்ளது.



கடந்த 13ம் திகதி ஒக்கம் பிட்டிய பிரதேசத்தில் உள்ள கல்ரம்மண்டிய கிராம வாசிகள் மீது புலிகள் மேற்கொண்ட தாக்குதலில் 3 பொது மக்கள் கொல்லப்பட்டும் ஒருவர் காயமடைந்தும் இருந்தார். இத்தாக்குதலில் இராணுவத்தில் இருந்து தப்பி ஓடி புலிகளுடன் இணைந்து செயற்படும் மில்ற்றன் என்பவரும் பங்கு கொண்டுள்ளதாக பொலிஸ் உயரதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

பல வருடங்களுக்கு முன்னர் இராணுவத்தில் இருந்து தப்பியோடி அம்பாறை ஜால காட்டுப்பிரதேசத்தில் செயற்படும் ராமுடன் இணைந்து கொண்ட மில்ரன் எனப்படும் இராணுவச் சிப்பாய் புத்தள, லம்புகஸ்பல்லம எனும் பிரதேசத்தை சேர்ந்தவர் என தெரியவருகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com