Sunday, April 5, 2009

கருணாநிதிக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டதை தொடர்ந்து இரு புலிச்சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

திருவானந்தபுரம் பிரதேசத்தில் நான்கு இலங்கைத் தமிழர்கள் கைது செய்யப்பட்டுள்ளாக தமிழ்நாட்டுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேற்படி நபர்களின் நடமாட்டத்தில் சந்தேகம் கொண்ட பொலிஸார் அவர்களைக் கைது செய்துள்ளதுடன் அவர்களில் இருவரை மேலதிக விசாரணைக்காக கியூ பிரிவு பொலிஸாரிடம் பாரப்படுத்தியுள்ளனர்.

கைது செய்யப்பட்டுள்ளவர்கள் ஜெயந்தன் 27, குகன் 24, ஜெயநாதன் 29, பாபு 29 என அடையாளம் காணப்பட்டுள்ளனர். முதல்வர் கருணாநிதிக்கு கடிதமூலம் விடுக்கப்பட்ட கொலை அச்சுறத்தைலத் தொடர்ந்து தமிழ் நாட்டில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.


No comments:

Post a Comment