Thursday, April 30, 2009

இடைத்தங்கல் முகாம்களில் உள்ள மக்களின் தாகம் தணிக்க தண்ணீர் பவுசர்கள் வேண்டும்.



வன்னியில் இருந்து பல துயரங்களைச் சந்தித்து வந்து இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் தாகம் தணிக்க தண்ணீர் பவுசர்கள் பற்றாக்குறையாக உள்ளதாக மீள் குடியேற்ற மற்றும் அனர்த்த நிவாரண அமைச்சு அறிவித்துள்ளது.

இம்மக்களின் இவ் அத்தியாவசியமான தேவையை பூர்த்தி செய்ய உதவி புரிய விரும்புவோர் (0094) 0112431590 என்ற இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தமது உதவிகளை புரியலாம் என அமைச்சகம் அறிவித்துள்ளது.


மேற்படி தேவையை பூர்த்தி செய்ய விரும்பும் புலம் பெயர் தமிழர்கள் இலங்கையிலுள்ள பவுசர் நிறுனங்கள் அல்லது அவற்றை வாடகைக்கு விடுகின்றவர்களைத் தொடர்பு கொண்டு தாம் விரும்பிய காலத்திற்கு அவ் பவுசர்களை அங்குள்ள மக்களின் தேவைக்காக வாடகைக்கு அமர்த்துவதன் மூலம் அம்மக்களின் தண்ணீர்த் தாகத்தை தணிக்க முடியும் என இலங்கைநெற் நம்புகின்றது.

No comments:

Post a Comment