இலங்கை யுத்தவிவகாரங்களில் நோர்வே அரசு மத்தியஸ்தம் வகிக்கும் வாய்ப்பை இழந்துள்ளதாக நேற்று இலங்கை அரசு உத்தியயோக பூர்வமாக அறிவித்திருந்தது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இலங்கைக்கான நோர்வேயின் விசேட தூதுவர் ஹான்சன், கடந்த 2006ம் ஆண்டிலிருந்து தமது
சமாதான மத்தியஸ்தம் மற்றும் அனுசரணை வேலைகளை தம்மால் முன்னெடுக்க முடிந்திருக்கவில்லை எனவும் அந்த வசதி போர் தொடங்கியவுடனேயே முடிந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment