Saturday, April 4, 2009

பிரபாகரனது மேலுமோர் குண்டுதுளைக்காத வாகனம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று மாலை புதுக்குடியிருப்பின் தென்கிழக்கு பிரதேசத்தில் இடம்பெற்ற உக்கிர மோதலின் பின்னர் அப்பிரதேசத்தை படையினர் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர். அங்கு தேடுதல் நாடாத்திய படையினர் புலிகளின் தலைவரினால் பாவிக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனம் ஒன்றையும் முற்றிலும் குளிரூட்டப்பட்ட பங்களா ஒன்றையும் கைப்பற்றியுள்ளாதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. மேலும் அச்செய்தியில் புலிகள் அவ்விடத்தை விட்டு ஒடும்போது 4 வாகனங்களை எரித்து விட்டுச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment