Friday, April 3, 2009

தமிழ் அரசில்வாதிகளின் வவுனியா விஜயத்தால் மக்களுக்கு பெரும் சிரமம். சிறுவர்கள் விசனம்.



தமிழ் அரசியல்வாதிகளான புளொட் இயக்க தலைவர் சித்தார்த்தன் , தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைவர் ஆனந்தசங்கரி , ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (நாபா அணி) தலைவர் சுகு மற்றும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சித் தலைவர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் மக்களைச் சந்திக்கும் பொருட்ட வவுனியாவில் தங்கியுள்ளனர்.

அமைச்சர் டக்ளஸ் வேவானந்தா மற்றும் திரு. ஆனந்தசங்கரி ஆகியோரது பலத்த இராணுவப் பாதுகாப்பானது வவுனியா மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு பெரும் குந்தகம் ஏற்படுத்தியுள்ளது. இவர்களது பாதுகாப்பு கருதி பிரதேசங்களில் உள்ள பெரும்பாலான பாதைகள் முடப்பட்டு, மக்களின் பாவனைக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. அமைச்சர் டக்களஸ் தேவானந்தா தங்கியிருக்கும் இடத்திற்கு அருகாமையில் உள்ள சிறுவர் பூங்கா ஒன்று முற்றிலும் பூட்டப்பட்டு சிறுவர்களின் பாவனைக்கு தற்காலிக தடைசெய்யப்பட்டுள்ளது.

மேலும் சித்தார்த்தன் மற்றும் சுகு ஆகியோர் தமது உறுப்பினர்களின் பாதுகாப்புடன் அவர்களின் காரியாலயங்களில் தங்கியுள்ளமையால் மக்கள் தாமாகவே விரும்பி அவர்களைச் சென்று சந்தித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
வவுனியா நிருபர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com