Wednesday, April 15, 2009

கடந்த யுத்த நிறுத்தத்தின்போது புலிகளால் இரு படையினர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர்.

தமிழ் சித்திரைப் புத்தாண்டை முன்னிட்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் உத்தரவின் பேரில் பிரகடணப்படுத்தப்பட்ட 48 மணித்தியாலய யுத்த நிறுத்தத்தின் போது புலிகளின் ஸ்னைப்பர் தாக்குதல் பிரிவினரால் இரு படையினர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

அதே நேரம் அம்பலவாணன்பொக்கணை மற்றும் புதுக்குடியிருப்பு கிழக்குப் பிரதேச முன்னரங்குகளில் நிலைகொண்டுள்ள படையினர் மீது புலிகள் சிறியரக ஆயுதங்கள் கொண்டு தாக்கியதில் சில படையினர் காயமடைந்துள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment