Tuesday, April 7, 2009

ஜேவிபி ஆதரவாளர் சுட்டுக்கொலை.



நேற்றுக்காலை வெயாங்கொட பிரதேசத்தில் வைத்து ஜேவிபி ஆதரவாளர் ஒருவர் இனந்தெரியாத ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். இக்கொலை மேல்மாகாண தேர்தல் வன்செயல்களின் முதற்கொலையாக பதிவு செய்யப்பட்டுள்ளது. சுட்டுக்கொல்லப்பட்டுள்ள நபர் நந்தன பாலகே என அடையாளம் காணப்பட்டுள்ளது.

கொல்லப்பட்டவரின் வாகனத்தை துரத்தி டபிள்கப் வாகனமொன்றில் வந்த ஆயுததாரிகள் அவரது வாகனம் மீது துப்பாக்கி பிரயோகம் செய்ததாகவும் அவ்வாகனத்தில் சென்ற மேலுமொருவர் காயமடைந்து கம்பஹா வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டப்பகலில் இடம்பெற்ற இச்செயலில் பிரசேச மக்கள் பதட்டமடைந்துள்ளதாகவும் தெரியவருகின்றது.

No comments:

Post a Comment