Monday, April 13, 2009

புலிகள் புதிய பாதுகாப்பு அணைகளை கட்ட முயற்சிக்கின்றனர்.

புதுக்குடியிருப்பு பிரதேச்தில் இருந்து முற்றாக விரட்டியடிக்கப்பட்டுள்ள புலிகள் நந்திக்கடல் ஏரிக்கு அப்பால் மக்கள் நிலைகொண்டுள்ள யுத்த சூனியப்பிரதேசத்தினுள் நுழைந்துள்ளதுடன் அப்பிரதேச்தை சுற்றி பாதுகாப்பு அணைகளை போடுவதற்று முயற்சிப்பதாக தெரியவருகின்றது.

நேற்று நான்குக்கு மேற்பட்ட இடங்களில் இவ்வாறான அணைகளை கட்டியெழுப்ப பொது மக்களை புலிகள் அமர்த்தியிருந்ததாக தெரியவருகின்றது. ஆனால் அங்கு நிலைகொண்டுள்ள படையினர் புலிகளின் அணைகளில் 2 கி.மீ பகுதியை கைப்பற்றியுள்ளதுடன் புலிகளின் புதிய அணைக்கட்டுவேலைகளை வெற்றிகரமாக முறியடித்து வருவதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment