Wednesday, April 8, 2009

யுத்த சூனியப் பிரதேசத்தினுள் பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள்.



யுத்த சூனியப் பிரதேசத்தைச் சுற்றி வளைத்துள்ள படையினர் இன்று அங்குள்ள தமிழ் மக்களை புலிகள் விடுவிப்பதுடன் தாமும் ஆயுதங்களை கீழே போட்டு சரணடைய வேண்டும் என அறிவித்திருந்தனர். இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டு சில மணிநேரங்களின் பின்னர் யுத்த சூனியப் பிரசேத்தினுள் பாரிய குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டதாக பாதுகாப்புப் படையினர் தெரிவிக்கின்றனர்.

அப்பிரதேசதில் படையினர் மக்களை வெளியேறுமாறு விடுத்த அறிவித்தல் அவர்களின் காதுகளை எட்டிய தருணத்தில் மக்கள் அங்கிருந்து வெளியேற முற்படுவதை தடுப்பதற்காக புலிகள் ஏதாவதொரு சதி முயற்சியில் இறங்கியிருக்க வேண்டும் என தெரியவருகின்றது.

No comments:

Post a Comment