Wednesday, April 15, 2009

கடற்புலிகளின் தற்கொலைத் தாக்குதல் முயற்சி முறியடிப்பு. ஒரு படகு கைப்பற்றப்பட்டுள்ளது.

இன்று காலை முல்லைத்தீவு கரையோரப் பிரதேசத்தில் கடற்புலிகள் மேற்கொள்ள முயன்ற தற்கொலை தாக்குதல் முயற்சி வெற்றிகரமாக முறியடிக்கப்பட்டுள்ளதுடன் தாக்குதல் நாடாத்த வந்த படகொன்று கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

மேற்படி தாக்குதலுக்கு வந்த புலிகளின் 2 படகுகள் முற்றாக நீரில் மூழ்கியுள்ளதுடன் ஆகக்குறைந்தது 10 கடற்புலிகள் கொல்லப்பட்டுள்ளதாகவும் கைப்பற்றப்பட்டுள்ள படகு சீ4 ரக வெடிமருந்துகளால் நிரப்பப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி தெரிவிக்கின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com