Friday, April 10, 2009

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இந்திய அழைப்பை நிராகரித்துள்ளனர்.



இலங்கை விவகாரங்கள் தொடர்பாக பேசுவதற்காக இந்தியாவினால் தமிழர் விடுதலைக் கூட்டமைப்பினருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலர் சிவசங்கர் மேனனினால் விடுக்கப்பட்ட அழைப்பு தொடர்பாக நேற்று கொழும்பில் கூடிய தமிழ் கூட்டமைப்பினர் இவ் அழைப்பை நிராகரிப்பதென்ற முடிவை எடுத்துள்ளனர்.

தாம் இந்தியாவின் அழைப்பிதளை நிராகரித்துள்ளமை தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள மாவை சேனாதிராஜா, இவ் யுத்தத்தை நிறுத்துவதற்கு இந்தியா நடவடிக்கை எடுத்திருக்க முடியும் எனவும் அனால் அச்செயலை செய்தை தவிர்த்து கொண்ட இந்திய அரசு தற்போது தாம் எதிர்கொள்ளவுள்ள தேர்தல் லாபம் கருதி தமக்கு அழைப்பு விடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.




No comments:

Post a Comment