Tuesday, April 28, 2009

வெடி பொருட்களுடன் வந்த மூன்று புலிகள் மன்னாரில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

புலிகள் இயக்க சந்தேக நபர்கள் மூவர் மன்னார் பிரதேசத்திலுள்ள இராணுவத்தினரால் கைது செய்யப் பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார நேற்றுத் தெரிவித்தார்.

பத்து கிலோ எடை யுள்ள அதிசக்தி வாய்ந்த சி- 4ரக வெடிமருந்து, இர ண்டு கைக்கண்டுகள் மற்றும் வெடிக்க வைக்கும் கருவி ஒன்றையும் இவர்கள் மூவரிடமிருந்து படையினர் கைப்பற்றியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

இராணுவத்தின் பிடியில் தடுத்து வைக்கப்பட்டிருந்த மூவரும் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பிரிகேடியர் மேலும் தெரிவித்தார்.

No comments:

Post a Comment