Thursday, April 9, 2009

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் எம்பி ஒருவர் பாதுகாப்பு வலையத்தினுள் சிக்கியுள்ளார்- மாவை சேனாதிராஜா.



தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ். கனகரத்தினம் வன்னியில் அரசினால் பிரகடணப்படுத்தப்பட்டுள்ள யுத்த சூனியப் பிரதேசத்தினுள் சிக்கியுள்ளதாக தமிழ் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

தமது கட்சிக்கும் பா.உ கனகரத்தினத்திற்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்திருக்கும் சேனாதிராஜா, பா.உ கனகரத்தினம் கடந்த வருட இறுதியில் தமது குடும்ப அங்கத்தவர்களைப் பார்வையிட முல்லைத்தீவு சென்றதாகவும் இதுவரை அவர் கொழும்பு திரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com