Saturday, April 25, 2009

பொதுமக்கள் வெளியேறுவதை தடுத்துக்கொண்டிருந்த இரு பெண்புலிகள் சுட்டுக்கொலை.



யுத்த சூனியப் பிரதேசத்தில் உள்ள மக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ள படையினர் தமது பணியின் கடைசிக் கட்டத்தை அடைந்துள்ளனர். நேற்று அம்பலவாணன்பொக்கை மற்றும் வலைஞர்மடம் பிரதேசத்தில் உள்ள மக்கள் வெளியேறுவத்கு தேவையான உதவிகளை படையினர் மேற்கொண்டிருந்தனர்.

ஆனால் அப்பிரசேத்தில் உள்ள மக்கள் புலிகளினால் மிகவும் உன்னியப்பாக அவதானிக்கப்படுவதுடன் தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என படையினர் தெரிவிக்கின்றனர். நேற்று மேற்படி பிரதேசத்தில் இருந்து வெளியேற முற்பட்ட மக்களை ஆயுதமுனையில் தடுத்துக் கொண்டிருந்த புலிகள் இருவரை அவதானித்த படையினர் அவர்களைச் சுட்டுக்கொன்றுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும் பெண்புலிகள் எனக் கூறப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com