Thursday, April 9, 2009

ஐசிஆர்சி ஊழியர் ஒருவர் பலி.



இன்று காலை அம்பலவாணன் பொக்கணைப் பிரதேசத்தில் தமது குடும்ப அங்கத்தவர்களுக்காக தண்ணீர் அள்ளிக்கொண்டிருந்த சின்னத்துரை குகதாஸன் எனும் சர்வதேச செஞ்சிலுவைச் சங்க ஊழியர் ஒருவர் செல்தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக அந் நிறுவனம் அறிவித்துள்ளது.

இவருடைய இழப்பையிட்டு தாம் பெரிதும் கவலையடைவதாக தெரிவித்துள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் கொழும்பு அலுவலக தலைமை அதிகாரி போல் காஸ்ரெலா குகதாஸனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கும் தமது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

கடந்த மார்ச் மாதம் 4ம் திகதி வலயன்மடம் பிரதேசத்தில் மக்களை வெளியேற்றும் பணியில் ஈடுபட்டிருந்த வடிவேல் விஜயகுமார் எனும் ஐசிஆர்சி யின் ஊழியர் ஒருவரும் இவ்வாறானதொரு செல் தாக்குதலில் உயிரிழந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com