Monday, April 6, 2009

காயமடைந்துள்ள பிரபாகரனது மகனை மலேசியா கொண்டு செல்ல முயற்சிக்கும் புலிகள். சொர்ணத்தின் கால் களற்றப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் மாதம் 11ம் திகதி 58ம் படையணியின் கீழ் செயற்படும் 11ம் ஆட்லறிப் பிரிவினரின் முன்னரங்குகளை ஊடறுத்து தாக்குதல் மேற்கொள்ள புலிகள் முயற்சித்திருந்தனர். இத்தாக்குதல் படையினர் முறியடித்திருந்ததுடன் அதில் பிரபாகரனது மகனும் காயமடைந்திருந்தார். படையினரது புலனாய்வுத் தகவல்களின் படி சார்ள்ஸ் அன்ரனி தோள்பட்டையிலும் முதுகுப்புறத்திலும் காயமடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

அதே நேரம் பிறிதொரு தாக்குதலில் புலிகளின் முன்நிலைத் தளபதிகளில் ஒருவரான சொர்ணம் படுகாயமடைந்துள்ளதுடன் அவரது ஒரு கால் கழற்றப்பட்டுள்ளதாக அண்மையில் படையினரிடம் சரணடைந்த புலிகள் தெரிவித்துள்ளனர். சொர்ணத்தால் எதிர்காலத்தில் களமுனைக்கு செல்லமுடியாது எனவும் அவர் தொலைதொடர்பு சாதனங்கள் மூலம் கட்டளைகளை வழங்குகின்றார் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதே நேரம் பிரபாகரனது மகன் சார்ள்ஸ் அன்ரனி , சொர்ணம் மற்றும் லோரன்ஸ் ஆகியோரை கடல்மார்க்கமாக சிகிச்சைக்காக மலேசியா கொண்டுசெல்ல புலிகள் முயற்சித்து வருவதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment