Wednesday, April 8, 2009

பிரபாகரனை சரணடையுமாறு கூப்பிடு தூரத்தில் நின்று ஒலிபெருக்கி மூலம் அறிவிக்கப்படுகின்றது.



வன்னியின் சகல பிரதேசங்களையும் தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ள படையினர் பிரபாகரனை அவருடன் மனிதகேடயங்களாக வைத்திருக்கின்ற இறுதி போராளிகளுடன் சரணடையுமாறு கூப்பிடு தூரத்தில் நின்று ஒலிபெருக்கி மூலம் அறிவித்து வருகின்றனர். யுத்தசூனியப் பிரதேசத்தை சுற்றிவளைத்துள்ள படையினர் பொதுமக்களின் நலன் கருதி மோதல் ஒன்றை தவிர்த்துக்கொள்ளும் நோக்கில் பிரபாகரனுக்கு இவ் கடைசி அறிவித்தலை விடுத்து வருகின்றனர்.

தோல்வி மேல் தோல்வியை தழுவி அரசினால் மக்களுக்காக பிரகடணப்படுத்தியுள்ள யுத்தசூனிய பிரதேசத்தினுள் ஓழிந்துள்ளதாக சந்தேகிக்கப்படும் பிரபாகரனை கைது செய்வதே தமது இன்றைய இலக்கு என அறிவித்துள்ள அரசாங்கம் மக்களின் நலனுக்காக தற்போதைக்கு யுத்தசூனியப் பிரதேசத்தினுள் நுழையப்போவதில்லை எனவும் அறிவித்துள்ளது.

இந்நிலையில் பிரபாகரன் அப்பிரதேசத்தில் இருப்பாராக இருந்தால் ஒலிபெருக்கிச் சத்தம் அவரது காதுகளில் கேட்கும் என கருதப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com