Monday, April 13, 2009

நோர்வேயில் இலங்கைத் தூதரகம் தாக்கப்பட்டமைக்கு வருத்தம் தெரிவிக்கும் நோர்வே அரசு.



நேற்று ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டிருந்த புலிகளின் ஆதரவாளர்கள் நோர்வேயில் உள்ள இலங்கைத் தூதரகவளாகத்தினுள் நுழைந்து அதன் கட்டடத்திற்கும் அங்குள்ள தளபாடங்களுக்கும் சேதம் விளைவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமது வருத்தத்தை தெரிவித்துள்ள நோர்வே அரசு புலி ஆதரவாளர்கள் அத்துமீறி தூதரக வளாகத்தினுள் நுழைந்தமை சட்டவிரோதமானதெனவும் சம்பந்தப்பட்டோரை கைது செய்வதற்கான நடவடிக்கையில் பொலிஸார் இறங்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

தூதரகம் தாக்கப்பட்ட வீடியோ காட்சி (அழுத்துங்கள் )



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com