Saturday, April 11, 2009

புலிகளின் துப்பாக்கிச் சூட்டில் கர்பிணித்தாய் படுகாயம்.



இன்று காலை 7.00 மணியளவில் புதுமாத்தளன் யுத்த சூனியப்பிரதேசத்தில் இருந்து வெளியேறிய மக்கள் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் 3 மாத கர்பிணி மாதொருவர் படுகாயமடைந்துள்ளார். புலிகளின் பிடியில் இருந்து வெளியேறிய மக்கள் மீது புலிகள் மேற்கொண்ட துப்பாக்கி பிரயோகத்தில் பலர் காயமடைந்துள்ளதுடன் சிலர் மீண்டும் யுத்த சூனியப்பிரதேத்திற்கு திருப்பியும் சிலர் காயங்களுடன் அரச கட்டுப்பாட்டு பகுதியினுள் வந்தடைந்தும் உள்ளனர்.

அவ்வாறு காயங்களுடன் அரச கட்டுப்பாட்டினுள் வந்தடைந்தவர்களுள் 3 மாத கர்பிணியின் நிலைமை கலலைக்கிடமாக இருப்பதாக தெரியவருகின்றது. தோள் பகுதியிலும் செஞ்சிலும் காயமடைந்துள்ள மேற்படி பெண் புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் வைத்து இராணுவ மருத்துவ பிரவினால் முதற்கட்ட சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். அவருடைய நிலைமை மோசம் என்பதை உணர்ந்து கொண்ட இராணுவ மருத்துவப் பிரிவினர் அவரை உடனடியாக அம்புலன்ஸ் வண்டி மூலம் வவுனியா வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

அவர் வவுனியா அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சத்திரசிகிச்சை இடம்பெறுவதாக வவுனியா வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com