Wednesday, April 8, 2009

ஜஸாகல்லாஹ் ஹைர் -அல்லாஹ் உங்களுக்கு நற்கூலி தருவானாக. - யஹியா வாஸித் -

சற்லைட்டில் ரீ.வீ.யில் உலகை மிரட்டிய தலைவன் இன்று லவுட்ஸ்பீக்கர் வைத்து கூப்பிடும் தூரத்தில்.

தீபன் இறந்து விட்டார், விதுஷா பிணமாக கிடக்கிறார். 250 புலிகள் செத்து விழுந்து விட்டார்கள். ஆனால் இன்னும் இறுமாப்பும், கொழுப்பும் அடங்கவில்லை. நாளைக்கு சங்கிலிப் போராட்டம், நாளை மறுதினம் ஊர்வலம், அதற்கடுத்த நாள் கையெழுத்துப் போராட்டம். அதற்கப்புறம் அய்யன்னா நாவன்னாவுக்கு தந்தியடிப்பு போராட்டம், அதற்கும் அப்புறம்........

இவையெல்லாம் சரி வராது ஆயுதம் தூக்கினால்தான் இந்தஅய்யன்னா நாவன்னாவும், உலக நாடுகளும் கேட்பானுகள் போல் இருக்கிறது. எனவே மீண்டும் உலக நாடுகளில் ஆயுதம் தூக்குவோம். மீண்டும் தொடக்கப் புள்ளிக்கா? எத்தனை உயிர்கள், எத்தனை அழிவுகள், எத்தனை கொடுமை, எத்தனை வேதனை!

பல ஆயிரம் உயிர்களை சாவாகாசமாக காவு கொண்டவர்கள் இப்போது உயிர்களின் பெறுமதி பற்றி நீலிக் கண்ணீர் வடிக்கின்றனர். ஒரு தாய்க்குத்தான் தெரியும் ஒரு பிள்ளையின் வேதனை. இன்று அடிவயிற்றை பிடித்துக் கொண்டு அழும் தீபனின் தாயும், விதுஷாவின் தாயும் இன்னும் இருநூற்றி ஐம்பதுக்கு மேற்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின்
தாய்மாருக்கு யார் ஆறுதல் கூறுவது.

அவளுகள் என்ன கல்லையா பிள்ளையாக பெற்றார்கள். முத்துக்களை அல்லவா பெற்றார்கள். அவளுக்கு அது பொன்குஞ்சு அல்லவா. கலிங்கம் சென்றான் கடாரம் கொண்டான். திரைகடல் ஓடினான், திரவியம் தேடினான். உலக நாடுகளை உருவாக்கித்தந்தான் என்ற தமிழன் இன்று ஐரோப்பிய புலம் பெயர் நாடுகளில் ஒரே
ஒரு தலைவருக்காக காவடி ஆடுகின்றான். அன்று எல்லாம் எமக்குத் தெரியும் என்று உலக நாடுகளைப் பார்த்து இறுமாந்த தமிழன் இன்று ஐயகோ எங்களுக்கு கை கொடுங்களேன் என
வீதிகளை ஆக்கிரமித்து அர்த்த நாரீஸ்வரம் பாடுகின்றான்.

தவறான அஸ்திவாரம், சறுக்கலான நிர்மாணம், கூறுகெட்டத்தனமான கோப்பிஷம், தான்தோன்றித்தனமான நிர்வாகம் என ஆல விருட்சமாக வளர்ந்த விடுதலைப் புலிகளின் கோட்டைகள் சரிந்து அஸ்திவாரம் பிடுங்கப் பட்டுக்கொண்டிருக்கிறது. 25 வருடமாக வெளியே பெயின்ட் மேல் பெயின்ட்டாக அடித்து வேடிக்கை காட்டியவர்கள் இப்போதுதான் அஸ்திவாரம் பற்றி சிந்திக்கின்றனர். தொடர் போராட்டம் நடாத்துகின்றனர்.

கையிலே கொடி முகத்திலே வெறி மீண்டும் வருகிறது அகிம்சை போராட்டம்
அய்யன்னா நாவன்னாவும், இங்கிலாந்து பாராழுமன்றமும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனவாம். இது இன்றைய தலைப்பு செய்தி. அவர்களுக்கு இப்போது வேறு வேலையே இல்லை. இங்கிலாந்து பாராளுமன்றத்துக்குள் தூங்கிக் கொண்டிருந்த கோர்டன் பிறவுணும், அய்யன்னா நாவன்னாவில் பேய்க்குப்பேன் பார்த்துக் கொண்டிருந்த பான் கீ மூனும் செய்வதறியாது திகைத்து நிற்கின்றனராம். இப்படி எத்தனைமுறை இவர்களை திகைக்கவைத்துள்ளீர்கள். அந்த திகைப்பின் உச்சம்தானே உங்கள் மீது விதிக்கப்பட்ட உலகத்தடைகள்.

சற்லைட்டில் ரீ.வீ.யில் உலகை மிரட்டிய தலைவன் இன்று லவுட்ஸ்பீக்கர் வைத்து கூப்பிடும் தூரத்தில்.

உங்களால் செய்யப்பட்ட அனைத்து பழிவாங்கல்களையும் நாங்கள் மன்னித்து விட்டோம். இன்னும் நீங்கள் ஆயிரம் பேரை கொல்லுங்கள் நாங்கள் யாரும் கேட்கப் போவதில்லை. நாங்கள்தான் வக்கற்றவர்களாச்சே. பணபலம், முப்படை பலம், புலம்பெயர் நாடுகளை கிலி கொள்ளச் செய்யும் ஊடக பலம் எல்லாமே உங்கள் கையில்தானே இருக்கிறது. நடக்கட்டும், நடக்கட்டும் எல்லாமே நன்றாகவே நடக்கட்டும். சிங்களவனின் ரத்தம் குடியுங்கள், அப்பாவி தமிழனை பணயம் வைத்து சாகடியுங்கள், சோனிக்காக்காமாரை சுட்டுத்தள்ளுங்கள். ரொம்ப ஜாலியாக இருக்கிறது. எல்லோருடைய பிள்ளைகளும் உங்களுக்கு சும்மா. வேலுப்பிள்ளையர்ர மகன்மட்டும் கைம்மா(கொம்பன்யானை).

ஆனால் ராஜீவ் காந்தி என்ற ஒரு மனிதனை கிழித்து சுக்கு நூறாக்கி விட்டு பத்தோடு பதினொன்றாக இறுமாந்ததின் பலனைத்தான் இன்று மொத்த தமிழனும் அனுபவித்துக் கொண்டிருக்கின்றான் என்பதையும் மறந்து விடாதீர்கள். பார்த்தீர்களா ஒரு தாயினதும் இரண்டு பிஞ்சுக் குழந்தைகளினதும் இத்தனூண்டு வைராக்கியம் 18 வருடத்தின் பின் விஷூவரூபம் எடுத்து தமிழனை சந்தி சிரிக்க வைத்து விட்டது.

கலி சிறிலங்காவில் விடுதலைப் புலிகள் என்ற ரூபத்தில் பிறந்து விட்டது. எனவே மகனே எதிர்கால தமிழீழம் இப்படித்தான் இருக்கும் என்று ஒருவன் அறம்பாடியிருந்தான்.

காவலாம் வேலியே பயிர்களை மேயும்
மோஷமும் வேஷமும் மணிமுடி சூடும்
படித்தவர் பண்டிதர் பசியால் துடிப்பர்
பஞ்ஞமா பாதகர் பால் பழம் குடிப்பர்
ஆலையம் பெரும்பாலும் பாழாய் கிடக்கும்
எங்குமே என்கின்ற ஆணவம் நிறையும்
பிள்ளைகள் பெற்றோரை தெருவிலே வீசுவர்
குலம் மாதர் பண்பாடோ வேடிக்கை ஆகும்
மரம் செடி கொடி எல்லாம் துப்பாக்கிகள் சாய்க்கும்
தானியம் குறையும் சரித்திரம் குனியும்
தளை கனி காய் எல்லாம் விஷமாய் விழையும்


அவன்ட வாய்க்கு சக்கரை போட வேண்டும். இப்போது, அகிம்சை தேடி அலைகின்றனர்
கொலை செய்யும் மனிதர்கள் இன்னுமா புன்னகைக்கின்றாய் தமிழ்த்தாயே. என்று இன்னுமொருவன் பாடமுதல் எல்லாம் முடிய வேண்டும். முடிந்த முடிவாக வேண்டும்.

முப்பதுவருடக் கனவு, பல கற்பனைகள், ஆயிரம் எண்ணப் பொருமல்கள், நூறாயிரம் வார்த்தைபிரயோகங்கள், இதயங்களை சல்லடையாக்கிய இரவுகள், விடியுமா, இனி விடியுமா என பெரிய முள் சின்ன முள்ளை புரட்டி எடுத்த சூரிய உதயங்கள் எல்லாம், எல்லாமே சிறுபிள்ளை வேளாண்மை வீடு போய் சேராதாம் என்பதை குத்திக்காட்டி.......மீண்டும் தொடங்கிய இடமா? இல்லை, முடிந்த இடத்தில் இருந்து தொடங்குவதா? யார் தொடங்குவது? தொடங்கி விட்டார்களா? அது அதுவா இல்லை. வேறெதுவுமா?

இது அதுவாக இருக்கக் கூடாது. அதுகளையும், அவைகளையும் மறந்துவிட்டு புதிதாக பக்குவமாக. ஏதாவது ஒன்றை எதிர்பார்க்கும் தமிழ் சமூகம். நாட்டை துறந்து, மொழியை துறந்து, உற்றார் உறவினரை துறந்து இப்போது காத தூரத்தில் இருந்து கொண்டு அந்த மக்களுக்காக குரலெழுப்பும் ஒரு கூட்டம். அதே வெளி நாட்டு மந்தையில் இருந்து கொண்டு அதே மக்களை பலிகடாவாக்கித்தான் தீருவோம் என பிடிவாதமாக அடம் பிடிக்கும் இன்னொரு கூட்டம். ஒன்றுமே புரியாமல் மேய்ப்பர் பக்கமெல்லாம் போய்க் கொண்டு சூனியத்தை நோக்கி வன்னியும், தமிழ்த்தாயும். அவனுக்கு இப்போது தேவை

விலை பேசப்படாத அரசியல்
விற்கப் படாத கட்சி
அடகு வைக்கப்படாத ஓட்டுரிமை
உள்ளதை செய்யும் ஆட்சியோர்
நல்லதை செய்யும் ஆளத்துடிப்போர்.
கறை வேலிக்குப் படியாத சட்டம்
காசுக்கு பணியாத நீதி
அனைவரையும் அரவணைக்கும் தமிழன்
புகழ்ச்சிக்காக புலமை விடுத்து
தமிழ் வளர்ச்சிக்காக புலமை.
உங்களை கைபிடித்து வழிநடக்க நாங்கள் தயார்

எங்களை கை கொடுத்து வழி நடாத்த நீங்கள்தயாரா??? என ஒரு கூட்டம். அதை மகிந்த செய்தாலும் சரி. மகிந்தவின் வாரிசுகள் செய்தாலும் சரி. ஏதோ ஒரு மனிதம் அதை செய்ய வேண்டும்.


8-4-2009 VIII


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com