Sunday, April 5, 2009

தீபனின் குடும்பம் படையினரிடம் தஞ்சம்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் புலிகளின் பிடியில் இருந்து வெளியேறுகின்ற மக்களுடன் தீபனின் மூத்த சகோதரியும் அவரது குடும்பமும் படையினரிடம் சரணடைந்துள்ளனர். புலிகளின் பிடியில் இருந்து வெளியேறி வந்த அவர்கள் தாம் புலிகளின் முக்கிய தளபதிகளில் ஒருவராகிய தீபனின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்பதை படையினருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.

அத்தடன் தமது இளைய சகோதரர் புலிகளின் சார்ள்ஸ் அன்ரனி பிரிவில் உறுப்பினராக இருந்து கடந்த வாரம் இடம்பெற்ற தாக்குதல் ஒன்றில் உயிரிளந்துள்ளதாக தெரிவித்துள்ள அவர்கள், மேலும் தமது மூன்று சகோதரர்கள் கனடாவில் வசிப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் தீபன் நேற்று இடம்பெற்ற மோதலில் கொல்லப்பட்டுள்ளமை குறிப்படத்தக்கதாகும்.

No comments:

Post a Comment