Saturday, April 4, 2009

பிரபாகரனின் முக்கிய ஆவனப் பத்திரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.



புலிகளின் தலைவர் பிரபாகரனது முக்கிய ஆவனங்கள் புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரபாகரன் அப்பிரதேசத்தை விட்டு ஓடும்போது பக்குவமாக புதைத்து வைத்துச் சென்ற பொருட்கள் 53 ம் படையணியினரால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது. இதில் பிரபாகரனது பிறப்பு அத்தாட்சி பத்திரம், ஜாதகம் மற்றும் குடும்ப அல்பம் என்பன உட்பட பல ஆவனங்கள் அடங்குவதாக தெரியவருகின்றது.

புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் செயற்பட்டுவரும் 58ம் , 53ம் படையணியினர் அப்பிரதேசத்தில் புலிகளுக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தி பல இராணுவ உபகரணங்களையும் கொல்லப்பட்ட புலிகளின் உடல்களையும் கடந்த சில நாட்களாக கைப்பற்றி வருவது குறிப்பிடத்தக்கதாகும்.

No comments:

Post a Comment