Wednesday, April 29, 2009

முல்லைத்தீவு கடற்பரப்பில் மோதல். 25 புலிகள் பலி.



முள்ளிவாய்கால் பகுதியில் சிக்கியுள்ள மக்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுவரும் படையினர் மீது கடல் மார்க்கமாக தரையிறங்கி தாக்குதல் நாடாத்த கடற்புலிகள் மேற்கொண்ட முயற்சி இன்று அதிகாலை முறியடிக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன. முல்லைத்தீவு கடற்பரப்பில் இடம்பெற்ற இம் மோதலின் போது புலிகளின் 4 தற்கொலைப் படகுகள் உட்பட ஆறு படகுகள் நீர்மூலமாக்கப்பட்டுள்தாகவும் 25 இற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அச்செய்தி மேலும் தெரிவிக்கின்றது.

No comments:

Post a Comment