Wednesday, April 15, 2009

மேலும் 249 பொதுமக்கள் புலிகளின் பிடியில் இருந்து தப்பியுள்ளனர்.

நேற்று செவ்வாய்கிழமை யுத்த சூனியப்பிரதேசத்தில் இருந்து 249 பொதுமக்கள் விடுவிக்கப்பட்ட பிரதேசங்களை வந்தடைந்துள்ளனர். படையினரால் மக்கள் வெளியேறுவதற்கு பாதுகாப்பான இடங்களாக அறிவிக்கப்பட்டுள்ள அம்பலவாணன்பொக்கணை மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேசங்களையே இம்மக்கள் வந்தடைந்ததாக தெரியவருகின்றது.

இவர்களில் 77 ஆண்கள் 66 பெண்கள் 38 சிறுவர்கள் 38 சிறுமிகள் அடங்குவதாகவும் அவர்கள் இடைத்தங்கல் முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்புட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது. இவர்களின் வருகையுடன் புலிகள் பிடியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ள மக்களது எண்ணிக்கை 68047 ஆக உயர்ந்துள்ளது.

No comments:

Post a Comment