Saturday, April 25, 2009

21 மதகுருமார் புலிகளின் வன்பிடியில் இருந்து தப்பி வந்துள்ளனர்.


புதுமாத்தளன் யுத்தசூனியப் பிரதேசத்தில் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த 21 பிரமச்சாரிகளான கிறிஸ்தவ மதகுருமார் இன்று காலை 10.30 மணியளவில் முல்லைத்தீவு, முள்ளியவளைப் பிரதேசத்தில் நிலைகொண்டுள்ள படையினரிடம் தஞ்சம் கோரியுள்ளனர்.

இவ்வாறு வந்துள்ளவர்களுள் 3 அருட்தந்தைகளும் 14 அருட்சகோதரிகளும் 4 பிரமச்சாரிய பயிற்சி பெறுவோரும் அடங்குவதாக தெரியவருகின்றது. மேற்படி குழுவினர், தாம் புலிகளால் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில், அங்கிருந்து வெளியேறுவதற்காக புலிகளிடம் பல முறை வேண்டுகோள் விடுத்திருந்தாகவும், புலிகள் தம்மை வெளியேற அனுமதிக்காமல் தொடர்ந்தும் தடுத்து வைத்திருந்த நிலையில் கிடைத்த சந்தர்ப்பம் ஒன்றைப் பயன்படுத்தி தாம் தப்பி வந்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.




No comments:

Post a Comment