Tuesday, April 7, 2009

2009 ஆம் ஆண்டின் சுதந்திர ஊடகவியலாளருக்கான யுனெஸ்கோ விருது லசந்த விக்ரமதுங்கவுக்கு.



கடந்த ஜனவரி மாதம் 8ம் திகதி அத்தியடி பிரதேசத்தில் வைத்து இனம்தெரியாக ஆயுததாரிகளால் சுட்டுக்கொல்லப்பட்டவரும் இலங்கையில் முன்னணி ஊடகவியலாளர்களில் ஒருவராக திகழ்ந்தவருமான சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் அமரர் லசந்த விக்கிரமதுங்கவுக்கு 2009 ஆம் ஆண்டுக்கான யுனஸ்கோ விருது வழங்கப்பட்டுள்ளது.

2009 ஆம் ஆண்டுக்கான சுதந்திர ஊடகவியலாளருக்கான விருதே அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எதிர்வரும் மே மாதம் 3ஆம் திகதி இந்த விருது வழங்கப்படவுள்ளது.

ஆனால் லசந்தவின் கொலையாளிகள் இதுவரை கைதுசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com