Saturday, April 4, 2009

புலிகளின் 130 மிமி ஆட்லறி மற்றும் 35 உடலங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.



தொடர்ந்து முன்னேறிவரும் படையினருக்கும் புலிகளுக்கும் இடையில் புதுக்குடியிருப்பு கிழக்கு பிரதேசத்தில் இன்று இடம்பெற்ற மோதலில் புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மோதலைத் தொடர்ந்து படையினர் புலிகளின் 35 உடலங்களையும் ஆயுதங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

மேலும் ஆனந்தபுரம் பிரதேசத்தில் 58ம் படைப்பிரிவின் செயற்படும் 14 கஜபா அணியினர் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கை ஒன்றில் புலிகளின் 130 மிமி ஆட்லறி ஒன்றை கைப்பற்றியுள்ளனர். புலிகள் கடந்த சில வாரங்களாக தமது முன்னரங்குகளுக்கு ஆட்லறிகளை கொண்டுவந்து நிறுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment