Sunday, April 12, 2009

புலிகளின் 1 கிலோமீற்றர் பாதுகாப்பு மண்அணை கைப்பற்றப்பட்டுள்ளது.

புதுமாத்தளன் பகுதியில் புலிகளின் பிடியில் உள்ள மக்களை மீட்கும் பணியில் இறங்கியுள்ள படையினர் நேற்றுக்காலை நந்திக்கடலுக்கு கிழக்கே புலிகளின் 1 கி.மீ பாதுகாப்பு மண் அணைக்கட்டை தமது பூரண கட்டுப்பாட்டினுள் கொண்டு வந்துள்ளனர்.

யுத்த சூனிய பிரதேசம் தவிர்ந்த சகல பிரதேசங்களையும் இழந்துள்ள புலிகள் தங்கியுள்ள யுத்த சூனியப் பிரதேசம் நந்திக்கடல் ஏரியினால் பிரிக்கப்பட்டுள்ளது. ஏரிக்கு அக்கரையில் புலிகள் பாதுகாப்பு அணைகளை அமைத்துள்ளனர். படையினர் தற்போது மேற்கொண்டுவரும் நடவடிக்கைகளில் மேற்படி பாதுகாப்பு உத்திகளும் படையினரிடம் வீழ்ந்து வருகின்றது.

No comments:

Post a Comment