Thursday, March 26, 2009

புலிகள் ஊடுருவித் தாக்குதல் : புலிகளின் நான்கு தளபதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு புதுக்குடியிருப்பு பிரதேசத்தினுள் புலிகளின் படையணி ஒன்று ஊடுருவித் தாக்குதல் ஒன்றை மேற்கொண்டுள்ளது. இத்தாக்குதலை 58ம் படையணியினர் இரவு முழுவதும் இடம்பெற்ற உக்கிர சண்டையின் பின்னர் வெற்றிகரமாக முறியடித்துள்ளனர். இத்தாக்குதலில் புலிகளின் தளபதிகளான வரதன் அண்ணா, காதர், சூரியன் மற்றும் ஈழவன் எனப்படுவோர் பலியாகியுள்ளதாக தெரியவருகின்றது.

அதேநேரம் புதுக்குடியிருப்பின் பிறிதொரு இடத்தில் 8 ம் விசேட கொமாண்டோ படையணியினருக்கும் புலிகளுக்கும் இடம்பெற்ற மோதல் ஒன்றில் புலிகளுக்கு பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. மோதலைத் தொடர்ந்து படையினர் அங்கு மேற்கொண்ட தேடுதலில் இத்தாக்குதலுக்காக புலிகள் வந்திருந்த டாடா டபிள்கப் ஒன்றையும் புலிகளின் 5 உடல்களையும் கைப்பற்றியுள்ளனர். அதில் இரண்டு ஆண்களதும் 3 பெண்களதும் உடலங்களாகும். அத்துடன் அவர்கள் கொண்டுவந்திருந்த ஆயுதங்கள் பலவற்றையும் கைப்பற்றியுள்ளதாக படைத்தரப்புச் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேலும் பட்டிக்கரை மற்றும் தேவாவெட்டி பிரதேசங்களிலும் தாக்குதல் இடம்பெற்றதாக தெரியவருகின்றது:

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com