Thursday, March 26, 2009

பொலிஸ் காதல் கொலையில் முடிந்தது.

நாரயன்பிட்டிய பொலிஸ் வைத்தியசாலையில் கடமை புரியும் பொலிஸ் கொஸ்தாபல் இந்திரஜித் என்பவர் அங்கு கடமை புரியும் பெண் உதவி பொலிஸ் பரிசோதகர் ஒருவருடன் காதல்வயப்பட்டிருந்தார். இன்று காலை இருவருக்கும் இடையில் ஏற்பட்ட வாய்தர்க்கம் துப்பாக்கி பிரயோகத்தில் முடிந்துள்ளது.

தனது காதலியான பெண் பரிசோதகரை கொஸ்தாபல் சுட்டுக்கொல்ல முற்பட்ட போது அங்கு கடமையில் இருந்த வேறு ஒரு அதிகாரியினால் கொஸ்தாபல் இந்திரஜித் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். பெண் பொலிஸ் பரிசோதகர் துப்பாக்கிப் பிரயோகத்தில் இருந்து தப்பிக்கொள்ள மூன்றாம் மாடியிலிருந்து குதித்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இலங்கைநெற் கொழும்பு நிருபர்

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com