Thursday, March 19, 2009

திருமலை சிறுமியின் கொலைச் சந்தேக நபர்களில் ஒருவர் சயனைட் அருந்தி தற்கொலை.



திருமலை சிறுமியின் கொலைச் சந்தேக நபர்களில் ஒருவரான தமிழ் மக்களிள் விடுதலைப் புலிகளின் திருமலை மாவட்ட பொறுப்பாளரான ஜனா என்பவர் பொலிஸாரினல் கைது செய்யப்பட்டு விசாரணைசெய்யப்பட்டு வந்த நிலையில் சயனைட் அருந்தி தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவருகின்றது. சிறுமியின் கொலை சம்பந்தமாக இவர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து திருமலைப் பிரதேசத்தில் இடம்பெற்ற பல கொலைகளுக்கான சூத்திரதாரிகள் இவர்களே என்பதுட்பட பல திடுக்கிடும் தகவல்கள் விசாரணைகளின் மூலம் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகளின் தலைமைப் பீடத்தினால் இவருக்கு நஞ்சூட்டப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

No comments:

Post a Comment