Monday, March 30, 2009

அமைச்சர் முரளிதரன் மட்டக்களப்பில் ஊடகவியளார்களுடன் சந்திப்பு.



நல்லிணக்க மறுசீரமைப்பு அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் மட்டக்களப்பு மாவட்ட அனைத்து ஊடகவியலாளர்களையும் நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பிலுள்ள சிறீலங்கா சுதந்திர கட்சியின் அலுவலகமான தேனகத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.

இச்சந்திப்பின் போது கிழக்கு மாகாணத்தில் அரசினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற துரிதமான அபிவிருத்திப் பணிகள் பற்றி அமைச்சர் முரளிதரன் ஊடகவியளார்களுக்கு விழக்;கமளித்தார். இதே வேளை மட்டக்களப்பு மாவாட்டத்தில் ஊடகவியளார்கள் எதிர்நோக்குகின்ற பாதுகாப்பு பிரச்சனைகள் தொடர்பாகவும் இனங்களுக்கிடையான நல்லுறவை மேம்படுத்துவது தொடர்பாகவும் இங்கு விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது.

இக் கலந்துரையாடலில் அமைச்சரின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் ரஞ்சன் மற்றும் பிரதி இணைப்பாளார் நியுட்டன் ஆகியோரும் கலந்துகொண்டதுடன் சந்திப்பில் கலந்து கொண்ட அனைத்து ஊடகவியளார்களுக்கும் அமைச்சர் முரளிதரன் அவர்கள் அமைச்சர் பதவி ஏற்றதன் நினைவு பரிசில்களை வழங்கிவைத்ததுடன் ஊடகவியளார்களுடன் இரவு விருந்துபசாரத்திலும் கலந்துகொண்டார்.

தேனகச் செய்தித் தொடர்பாளர்


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com